டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த விவகாரத்தில் டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.
தேர்வுகளும் முறைகேடுகளும், அண்மைக்காலமாக பிரிக்க முடியாத தொடர்புடையதாக மாறிக்கொண்டிருக்கின்றன. அண்மையில் நீட் தேர்வில் நடந்திருந்த குளறுபடிகளும், அதைச் சுற்றி சுற்றி வலம் வந்த வழக்குகளும் தேசிய அளவில் பெரும் பேசுபொருளாயின. அந்த வரிசையில், தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி. ) நடத்திய குரூப்2ஏ மற்றும் குரூப்4 தேர்வில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடு பேசப்பட்டு வருகின்றது.